1.தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
2.சாது மிரண்டால் காடு கொள்ளாது.
3.சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
4.செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
5.நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
6.பாம்பின கால் பாம்பறியும்
7.புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி. 8.புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
9.பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார். 10.மனம் உண்டானால் இடம் உண்டு.
11.மனம் போல வாழ்வு.
12.மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம். 13.முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை
14.மெளனம் மலையைச் சாதிக்கும்.
15.மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை 16.வாழ்வும் தாழ்வும் சில காலம்.
17.வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
18.மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்
19.செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான் 20.எளி்யாரை வலியார் அடித்தால், வலியாரைத் தெய்வம் அடிக்கும்.
No comments:
Post a Comment